tamilnadu

img

பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 6-தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் (சிஐடியு) சங்கத்தின் சார்பில்பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஒசி நிர்வாகம் நிலுவையிலுள்ளஊதிய உயர்வை பேசி முடித்திட வேண்டும். பென்ச் மார்க் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும். 5 ஆண்டு காலஒப்பந்தத்தைக் கைவிட்டு, 3 ஆண்டாகமாற்றியமைக்க வேண்டும். அதிகநேரம் பணிக்கு ஒப்பந்தம் இல்லாததொழிலாளர்களை அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். கேண்டீனில் பாகுபாடான முறையில் உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும். கிராஜிவிட்டி  முறையை அமுல்படுத்த வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கமான ஐடிஇயு துணையுடன், நிர்வாகம் தொழிலாளர்  விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை ஐடிஇயு  தொழிற்சங்கமும், ஐஒசி  நிர்வாகமும் கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபெருந்துறை பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்தலைவர் என்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலதுணை தலைவர்கே.விஜயன்கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  சிஐடியு  தாலுகா தலைவர்  கே.குப்புசாமி, செயலாளர் எஸ்.என்.மயில்சாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.