tamilnadu

img

குடியிருப்புகளை காலி செய்ய அறிவிப்பு மாற்று இடம் கேட்டு காத்திருக்கும் போராட்டம்

ஈரோடு, டிச. 9- நீண்ட காலம் குடியிருந்து வந்த குடியிருப்புகளை காலி செய்ய அறி விக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மாற்று இடம் கேட்டு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் காத்திருக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு ஓடக்காடு, நல்லாகவுண்டன்பா ளையம் பகுதியில் 85 விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் என 2013 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வரு கிறார்கள்.  இந்நிலையில், தற்போது 33 வீடு களை வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக் குள் காலி செய்ய வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னரே பலமுறை ஈரோடு மா வட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோபிசெட்டிபாளையம் கோட் டப் பொறியாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதற்கி டையில் திடீரென வீடுகளை காலி செய்ய வேண்டும் என தண்டோரா போடப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இதனால் ஓடக்காடு பகுதி யில் வசிக்கும் மக்களின் குடியி ருப்புகளை காலி செய்வதை நிறுத் தவேண்டும். மாற்று இடம் வழங் கும் வரை தொடர்ந்து ஓடக்காடு பகு தியில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சிபிஎம் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் இளங் கோ, தாலுகா உதவிச் செயலாளர் ஜி.விமல், சிபிஎம் தாலுகா  கமிட்டி உறுப்பினர் என்.பழனி சாமி உட்பட திரளானோர் பங்கேற் றனர்.