கோபி, அக். 13- கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நெல் வயல்களில் பூச்சி மருத்து தெளிக்காமல் பயிர்களை இயற்கை முறையில் விளைவிக்க, இயற்கை மூலிகைகளை ட்ரோன் மூலம் தெளிக்கும் பணியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க் கால்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கரும், கீழ்பவானி பிர தான கால்வாய் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களுக்கு முதல் போக சாகு படிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவுப்பணிகள் முடி யுற்றுள்ள நிலையில், களையெடுக்கும் பணி துவங்கவுள் ளது.
இந்நிலையில், நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளிமி ருந்து நெற்பயிர்களை பாதுகாக்க புது முயற்சியாக ட்ரோன் மூலம் இயற்கை ஊட்டசத்துகளாக பஞ்சகவ்யம், பழச் சாறு மற்றும் மூலிகைகள் அடங்கிய கரைசலை நெற்பயிர் கள் மீது தெளித்து வருகின்றனர். இதனால் பயிர்களின் நல்ல வளர்ச்சிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும், கொடுப் பதாகவும், பயிர்களை தாக்கும் எவ்வித பூச்சிகளும் வராமல் தடுக்க முடியும். தற்போது கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்தில் 200 ஏக்கருக்கும் மேல் ட்ரோன் மூலம் இந்த இயற்கை ஊட்டச்சத்து கரைசலை தெளித்துள்ளதாகவும், விவசாயிகள் நாள்தோறும் ஆர்வமுடன் தங்களை அணுகி வருவதாக ட்ரோன் இயக்குபவர் தெரிவித்துள்ளார்.