tamilnadu

img

என் நிலம், என் உரிமை உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராவோம் ஈரோட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறைகூவல்

ஈரோடு, ஜூன் 29- ‘என் நிலம், என் உரிமை’ என்ற முழக்கம் ஏந்தி உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராவோம் என ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறைகூவல் விடுத்தனர். விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சென்னிமலையில், உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று நடை பெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், நாமக்கல் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், விவசாய நிலங்களை பாதுகாப்பது ஒரு ஜீவாதாரமான பிரச்சனை என்றும், இப்போராட்டத்தில் ஒட்டுமொத்த சமூகத்தை யும் ஒன்றிணைப்பது நமது கடமை என்றும் கூறினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி பேசுகையில், விவசாய நிலங்களை எடுத்து கார்ப்பரேட் கம்பெனி களுக்கு கொடுக்கும் நிலை உருவாகி யுள்ளது. உயர் மின் கோபுரங்களுக்கு தடை விதித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு வரும் வரை நிறுத்தப்பட வேண்டும் என்றார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி பேசுகையில், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டமானது நீண்ட காலமாக எந்த வன்முறையும் இன்றி நடந்து வருகிறது. ஆனால் அரசு இந்தப் போராட்டங்களில் வன்முறையை ஏவுகிறது. ஆனால் அதனையும் எதிர்த்து சட்டரீதியான போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சண்முகசுந்தரம் பேசுகையில், மத்தியில் உள்ள அரசு பாசிச அரசாகவும், அந்த  அரசிடம் பிச்சை எடுக்கும் அரசாக மாநில அரசும் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படுகிறது. ஆனால் அது விவ சாயிகளுக்கு பயன்பட வேண்டும். விவசாயி களுக்கு எதிரான நடவடிக்கைககளுக்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அப்பொ ழுது தான் விடிவு பிறக்கும் என்று கூறினார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகையில், கிராமங்கள் செத்துக்கொண்டு இருப்பதற்கான அறிகுறி தான், விவசாய நெருக்கடியின் உச்சம். கிரா மப்புறம் வேலையற்ற இடமாக மாறுகிறது. இந்த ஆட்சியாளர்களும் விவசாயிகளுக்கு உரிய விலை, பொருளுக்குக் கட்டுபடியான விலை போன்றவை வழங்க நடவடிக்கை  எடுப்பதில்லை. விவசாய நிலங்களில் செல விடப்பட்ட தொகை கூட அறுவடையின்போது விவசாயிக்கு கிடைப்பதில்லை. இன்றைய விவசாயிகள் விழிப்புணர்வு அடைந்து தெருவிற்கு வந்தார்கள் என்றால் பிரம்மாண்டமாக சேர்ந்து இந்த அரசைப் பணிய வைக்க முடியும் என்றார்.

பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசுகை யில், உயர்மின் அழுத்த கோபுரம், எட்டு  வழி சாலை, ஐடிபிஎல், ஆறு வழிச்சாலை,  ஹைட்ரோகார்பன் இவை அனைத்து திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற் கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளை காலி செய்வது உட்பட கொடூரமான அடக்கு முறையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் மக்களுக்கு பாதிக்கக்கூடிய திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என பேட்டி அளித்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு விரோதமான இந்த திட்டங்களை அமல் படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.  இந்த பொதுக்கூட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் ஏ.கே.பி.சின்ராஜ், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஈசன், ஏ.எம்.முனுசாமி, பி.பெருமாள் உள்ளிட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.