கோபி, ஜூன் 11- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் அடிக்கடி புகும் ஒற்றையானையால் வாழை, கரும்பு உள் ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட விவ சாயப்பகுதிகள் சேதமடைவதால் விவசா யிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியை ஒட்டி ஏராளமான விவ சாயத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட் டங்களில் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நி லையில் புதனன்று ஈஸ்வரமூர்த்தி என்ற விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை அங்கு பயிரிடப் பட்டு ஒருவார காலத்திற்குள் அறுவடை செய்யவிருந்த செவ்வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுமார் ரூ. 20 ஆயிரத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள் ளது. அதேபோல் பக்கதில் உள்ள கரும்பு, சோளம் மற்றும் சின்னவெங்காயம் உள் ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தியுள்ள தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள னர். எனவே, அடிக்கடி விவசாயத் தோட் டங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தும் ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண் டும் என்றும், வனப்பகுதியை ஒட்டி அகழி மற்றும் மின்வேலி அமைக்க வேண்டும் என வும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.