ஈரோடு, நவ. 24- ஈரோடு அவல்பூந்துறையின் வளர்ச்சி பணிகளுக்கு எம்.பி முட்டுக்கட்டையாக இருப்பதாக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என எம்.பி. அ.கணேசமூர்த்தி மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பின ராக இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் அவல்பூந்துறை பத்திரப்பதிவு அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சுகம் மகளிர் தொழிலியல், அரசு மானியம் ரூ.10 லட்சம் பெற்று நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. துணை வேளாண்மை விரிவாக்க மையம், பாரதி நகர் உள்ளிட்ட அவல்பூந்துறை நகரப் பகுதி முழுவதும் பயன் பெறும் வகையில் ஆழ் துளைக் கிணறு அமைத்து, மோட்டார் பொருத்தி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதேபோல் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து அரசு கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டப் பட்டன. பேரூராட்சி உள்ளிட்ட மற்ற பகு திகளுக்கும் பல பணிகள் நிறைவேற் றப்பட்டுள்ளன. ஈரோடு- காங்கேயம் சாலை விரிவாக்க பணிக்காக நில அளவைப் பணி செய்து வந்த சில அளவை அலுவலர்களை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவரது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக நீண்ட காலத்திற்கு முன்பே அரசின் பட்டா பெற்றுள்ளனர். அந்த இடத்தில் உள்ள கடை, வீடு போன்ற கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவ டிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரண மாக கட்டிட உரிமையாளர்கள் நேர்மை யாக அளவீடு செய்யுமாறு நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். நீதிமன்றம் நியமித் துள்ள கமிஷனர் மூலம் மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நில அளவைப் பணி பாதி நடைபெற்றுள்ளது. மீதிப் பகுதி எப்பொழுது நில அளவை நடை பெறும் என்பதை நீதிமன்றம் நியமித்த கமிஷனர் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் சனி யன்று நில அளவை நடைபெறும் என தனது அறிக்கையில் தானாக அறிவித்தது அவரது தலையீடு எவ்வளவு உள்ளது என்பதை அறிய முடிகிறது. பேரூராட்சிக்கு சொந்த மில்லாத பாவடி புறம்போக்கு இடத்தில் ரூ.10 லட்சம் செலவில் நிழல் கூடமும், சுகாதார வளாகமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் சுகா தார மையம் அமைக்கப்படுவதால் அதற்கு அருகில் உள்ள உணவகங்களில் வியா பாரம் பாதிக்கப்படும். இதனால், அவர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள் ளார்கள். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தான் தடையே தவிர இதற்கு நான் எந்த விதத்திலும் காரணம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.