tamilnadu

img

கோபி: தடப்பள்ளி பாசன வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்

கோபி, அக்.6- கோபிச்செட்டிபாளையம் அருகே தடப் பள்ளி பாசனவாய்க்காலில் அதிகளவு குப் பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகா தார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி பாசன வாய்க்காலிற்கு கடந்த மாதம் முதல் சாகு படிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது சாகுபடி பணிகள் நிறைவடையும் நிலை யில் உள்ளது. இந்நிலையில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளை யம் பகுதியில் செல்லும் தடப்பள்ளி வாய்க் காலில் குப்பைக் கழிவுகள், மருத்துவக் கழிவு கள் மற்றும் காய்கறிக் கழிவுகளை அதிக ளவு கொட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சவண்டப்பூர் ஊராட்சி நிர்வாகமும் தடப் பள்ளி வாய்க்காலை குப்பை மேடாக பயன் படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டு கின்றனர்.  தற்போது நெல் நடவுப்பணிகள் முடி யுற்ற நிலையில் இந்த குப்பைக் கழிவுகள் வயல் வெளிகளில் தேங்கியுள்ளதால் விவ சாயக்கூலி தொழிலாளர்களுக்கு பல்வேறு தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக வும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, தடப் பள்ளி பாசனவாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தடப்பள்ளி பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.