கோபி, நவ.18- கோழி வளர்ப்பு பண்ணையா ளர்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்துவிட்டாதாக தவறான செய்திகள் வெளியிட்டு வரும் கார்ப்பரேட் கோழி நிறுவ னங்களை கண்டித்து எதிர்வரும் நவ.21 ஆம் தேதி பல்லடத் தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போவ தாக விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தில் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.வி. மூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் கறிகோழி பண்ணைகள் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றன. இப்பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பண்ணைகளுக்கு கோழி நிறுவனங்கள் குஞ்சு தீவனம் ஆகியவற்றை வழங்கி அதனை பெற்று கறிக் கோழிகளை 40 முதல் 50 நாட்கள் வளர்த்தி கொடுக்கின்றனர். கோழி வளர்ப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ.3.50 முதல் 6 வரை மட்டுமே வழங்குகின்றனர். இதனால் கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்து முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனை தொடர்ந்து கோழி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைக்கு பல முறை அழைப் புக்கோரியும், இறுதியில் நவ.9 ஆம் தேதியன்று பல்லடத்தில் பேச்சுவார்த்தையும் நடத்தி னோம்.
அப்போதும் கிலோ ஒன்றுக்கு ரூ.5 வரை மட்டுமே வழங்க முடியும் என்று கோழி நிறுவனங்கள் தெரிவித்தன. இதையடுத்து கடந்த நவ.11 ஆம் தேதி முதல் கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கோழி நிறுவ னங்களிடமிருந்து குஞ்சுகளை பெற்று வளர்க்கப் போவ தில்லை எனக்கூறி காலவரை யற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வா யன்று கோழி வளர்ப்பு பண்ணை யாளர்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்துவிட்டாதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. இது வரை எவ்வித முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எங்களுக்கு கூலி உயர்வு கேட்டு நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட் டத்தை நீத்துப்போகச் செய்யும் வகையில் கார்ப்பரேட் கோழி நிறுவனங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வரு வதை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எதிர்வரும் நவ.21 ந்தேதி பல்லடத்தில் உள்ள கறிக் கோழி ஒருஙகிணைப்பு கமிட்டி தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள் ளோம். இவ்வாறு அவர் தெரிவித் தார்.