ஈரோடு, அக்.29- நுாறுநாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று மனு கொடுக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். வேலையின்றி தவித்து வரும் விவசாய தொழிலாளர்க ளுக்கு கொரோனா நிவாணமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும். இத்திட் டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், சலங்கபா ளையம் பேரூராட்சி முன்பு சங்கத்தின் தாலுகா செயலா ளர் எஸ்.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகம், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.வினிஷா உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூக லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலா ளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்க நிர்வாகி மகேஸ்வரி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலை வர் வி.ஆர்.மாணிக்கம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வெங்கிடுசாமி, சிஐடியுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில், மாநில செய லாளர் எம்.முத்து, மாவட்டச் செயலாளர் வி.கோவிந்த சாமி, மாவட்டத் தலைவர் கே.சி.ராமசாமி, மாவட்டப் பொரு ளாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன், வட்டச் செயலாளர் சின்னராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
ஓமலூர்
ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஓமலூர் தாலுகா செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. அரியா கவுண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.