tamilnadu

img

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு!

ஈரோடு,பிப்.10- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது.
அதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் இன்று ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக்கொண்டார்.