tamilnadu

ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் திருட்டை தடுக்க கோரிக்கை

ஈரோடு, ஜூலை 11- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உக்கரம் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சுமார்  1000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் மழையின் அளவு மிக மிகக் குறைவாக உள்ளது. ஆகையால் குடிநீர் பற்றாக்குறை மிகவும் அதிக மாக உள்ளது. அப்பகுதியினருக்குப் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தான்.  இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர்  வரும்போது அதிலிருந்து கசிகின்ற தண்ணீர், உக்கரம் குட்டையில் தேக்கத்திற்கு வருகிறது. கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் நிறுத்திய பிறகு, அந்த குட்டையில்  தேங்கியுள்ள நீரைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது அதிலும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிடுகிறது. அந்த ஓடையின் அருகில்தான் ஊராட்சி நிர்வாகம் மூலம் இரண்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறையைத் தீர்த்து வருகின்றனர்.  இதனிடையே 10 கி.மீ தொலைவில் உள்ள வரப் பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பெருச்சானூர் நபர்கள் சிலர் உக்கரம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் 4 ஏக்கர் பரப் பளவுள்ள இடத்தை வாங்கியுள்ளனர். நீர் தேக்கத்திலிருந்து 100 மீட்டருக்குக் குறைவாக உள்ள அந்த இடத்தில், மிகப்பெரிய கிணற்றை வெட்டி, ராட்சத மோட்டார் கள் மூலம் நீரை உறிஞ்சி, அவர்கள் ஊருக்கு எடுத்துச் செல்ல நிலத்தின் அடியில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால் நிலத்தடி நீர் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்கரம் பகுதி மக்களின் குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரம் பறிபோய்விடும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனைத் தடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

தோழர் ரமணி மறைவு - இரங்கல் கூட்டம்

ஈரோடு, ஜூலை 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா கமிட்டி உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா தலைவருமான டி.ரமணி (எ) ரவீந்திரன் கடந்த புதனன்று சாலை விபத் தில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் பெரியமோளபாளையத்தில் வியாழனன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அப்பகுதி மக்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைக ளுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரது தொடர் போராட்டத்தால் பல கோரிக்கைகளை வெற்றி கண்டுள்ளார். தொடர்ந்து மக்களின் நலனுக்காகவே அய ராது இரவு பகலாக போராடினார் என அவரது இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் தங்களது இரங்கலை பகிர்ந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டம் பெரியமோள பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிபிஎம் பவானி தாலுக்கா செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி, ஏ.எம்.முனுசாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.முத்துசாமி, ஜி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர்கள் பங்கேற்றனர்.