tamilnadu

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு, ஜன. 9- ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெறகிறது.   இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளியன்று காலை 10 மணிக்கு துவங்கும் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து பணியமர்த்த உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படுவோர்களின் வேலைவாய்ப்பு  அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது என  தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி  erodejobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

;