tamilnadu

சாக்கடையை மூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜன. 27- சாக்கடை கால்வாயை மூடிய நபர்களை கைது செய்யக்கோரியும், மூடியுள்ள சாக்கடையை சரிசெய்து தரக்கோரியும் பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா சின்னத்தம் பிபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள  சாக்கடைக் கால்வாயை சிலர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மூடியுள்ளனர். இதன் காரணமாக கழிவு  நீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் வசிக்கும்  பகுதிக்குள் தேங்கி, துர்நாற்றம் வீச ஆரம்பித்துள் ளது.  இதனை சரிசெய்ய பல முறை வட்டார வளர்ச்சி  அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால்  இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் சாக்கடையை மூடிய நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும், மூடப்பட்ட சாக்கடையை உடன டியாக சுத்தம் செய்ய வேண்டும் என திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

;