tamilnadu

img

தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் முறைகேடு - திமுகவினர் போராட்டம்

கோபி, மார்ச் 4- கோபிசெட்டிபாளையம் தூக்க நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன் றியக்குழு தலைவர் பதவிக்கு நடை பெற்ற தேர்தலில் முறைகேடு நடந் துள்ளதாகக் கூறி திமுகவினர் சாலை மறியல் மற்றும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூக்கநாயக் கன்பாளையம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 10 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் 7 திமுக கூட்டணியும், 3 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலை யில் தலைவர் பதவியை தேர்தெடுக் கும் மறைமுக தேர்தல் கடந்த ஜன வரி மாதம் 11ஆம் தேதியன்று நடை பெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மறு தேதி குறிப்பிடாமல் மறைமுக தேர்தலை தேர்தல் நடத்தும் அலு வலர் ஒத்திவைத்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த  ஜன. 30 ஆம் தேதி தூக்கநாயக் கன்பாளையம் ஒன்றிய அலுவல கத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் நடத்த ஆயத்தமாகியி ருந்தனர். இந்நிலையில் திமுக கட்சியைச் சேர்ந்த ஏழு ஒன்றியக் குழு உறுப்பினர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மையத் திற்கு வராததால் மறுபடியும் மறு தேதி குறிப்பிடப்படாமல் தேர் தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.  இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின் அடிப் படையில் மார்ச் 4 ஆம் தேதி (புத னன்று) மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மேற்பார்வையில் தேர்தல் நடை பெற்றது. மாவட்டக் கண்காணிப் பாளர் தலைமையில் நான்கடுக்கு பாதுகாப்பு பணியில் காவல் துறை யினர் ஈடுபட்டனர். தூக்கநாயக் கன்பாளையம் ஒன்றிய குழு  உறுப்பினர்கள் பத்து பேரும் குறிப் பிட்ட நேரத்திற்கு வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறை முகத் தேர்தலில் திமுக சார்பில் 3 ஆவது வார்டு உறுப்பினர் ஆசிர்வா தமும், அதிமுக சார்பில் 10 வது  வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி யும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். இத்தேர்தல் ஆன்லைன் வீடியோ பதிவுடன் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணும் பணி  நிறைவடைந்து. முடிவில் அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி 6 வாக்கு கள் பெற்று வெற்றிபெற்றதாக அறி விக்கப்பட்டது. இதனால் ஆவேச மடைந்த திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தூக்கநாயக் கன்பாளையம் அண்ணாசிலை முன்பு திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தியூர் - சத்தியமங்க லம் சாலையில் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்ட காவல் துறையினர் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினர். இதையடுத்து திமுகவினர் அண் ணாசிலை முன்பு நியாயம் கிடைக் கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி உண்ணாவிரத போராட் டத்தை தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.