கோபி, மே 21 - ஈரோட்டிலிருந்து 1500 வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் புத னன்று அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் அச்சம் காரண மாக கடந்த இரண்டு மாதங்களாக ஊர டங்கு அமலில் இருந்து வருவதால் அனைத்து பொதுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தங்கி பணியுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் அங்கு பணிபுரியும் உத்தர பிரதேசம், ஒடிசா, மிசோரம், அசாம் மாநி லங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 646 தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற் குட்பட்ட அந்தியூர், பவானி, சத்தியமங்க லம், தாளவாடி மற்றும் நம்பியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 361 தொழிலாளர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு வசதி களை செய்து கொடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பணியை மாவட்ட ஆட்சியர் கதி ரவன் நேரில் ஆய்வு செய்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். இதன்பின் மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், ஈரோட்டில் 35 நாட்களுக்கு மேலாக புதிதாக கொரோனா தொற்று கண்டறியப் படவில்லை. மாவட்டத்தில் இருந்த வெளி மாநிலங்ளைச் சேர்ந்த 1500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு சிறப்பு ரயில் மூலம் அனுப் பப்படுகின்றனர். இதேபோல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 3,267 நபர் களையும் கொரோனா பரிசோதனை செய் யப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
சிறப்பு ரயில் மூலம் புதனன்று வட மாநிலத் தொழிலாளர்கள் 1500 நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களது ஊர்க ளுக்கு போய் சேரும் வரை உணவு குடிநீர் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அவர்கள் அனைவருக்கும் முகக்கவ சங்கள் வழங்கி ரயிலில் தனிநபர் இடை வெளியை கடைபிடிக்கவும் வலியுறுத் தப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது மாவட் டத்தில் உள்ள வடமாநிலத் தொழிலா ளர்கள் அனைவருக்கும் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என மருத்துவர்கள் மூலம் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.