tamilnadu

img

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1ந்தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.  அணையில் இருந்து ஆக.1 ந்தேதி முதல் நவ.28 ந்தேதி வரை நீர் திறக்கப்படும்.அணையில் இருந்து திறக்கப்படும் நீரால்கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி,உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

;