சத்தியமங்கலம், மார்ச் 21- சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் என 2 வனக்கோட்டங்க ளில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாள வாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின் றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வனப்ப குதியில் உள்ள மரம் மற்றும் செடி, கொடிகள் காய்ந்து கருகி விட்டது. மேலும் வனப்பகுதியில் உள்ள பள்ளங்கள், ஓடை கள், வனக்குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் வற்றி யதால் தற்போது வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனத்தைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாயி கள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் வனவிலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக வனத்துறை சார்பில் வனப்பகுதியில் ஆங்காங்கே தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இவ்வாறு தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.