tamilnadu

பப்ஜி கேம் மோகம்: சிறுவன் தற்கொலை

கோபி, அக்.27-  புஞ்சை புளியம்பட்டி அருகே பப்ஜி கேம் விளையாடி யதால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்த வேல். இவரது மகன் அருண் (16). செல்போனில் பப்ஜி கேம் தொடர்ந்து விளையாடியதால் மனநலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் இரண்டு மாதங்களாக அருண் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன்பின்னர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கள்ளிப் பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்துப் பண்ணை வீட்டில் கந்தவேல் கடந்த மூன்று மாதங்களாக குடும்பத்து டன் வசித்து வந்தார்.  இந்நிலையில், திங்களன்று இரவு அருண் தனியாக உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது.