tamilnadu

பூதப்பாடியில் ரூ.6.61 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

 ஈரோடு, செப்.5- ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.61 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது.  இங்கு, 9,774 தேங்காய்கள், சிறியவை ரூ.5.50 முதல் பெரியவை ரூ.16.40 வரையிலும் மொத்தம் ரூ.93,608க்கு ஏலம் போனது. 84 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.70.70 முதல் ரூ.100.50 வரையில் ரூ.1,91,923க்கும், 22 மூட்டைகள் நிலக்கடலைக் காய் கிலோ ரூ.55 முதல் ரூ.66 வரையில் ரூ.47,398க்கும், 239 மூட்டைகள் நெல் கிலோ ரூ.15.15 முதல் ரூ.23 வரையில் ரூ.3,28,268க்கும் ஏலம் போனது.  மொத்தம் 345 மூட்டைகள் அடங்கிய 249.32 குவின்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.6,61,197க்கு விற்பனையானது. அம்மாபேட்டை, பூதப்பாடி, அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். என்று விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் கா.வீ.குமரேசன் தெரிவித்தார்.