tamilnadu

img

ஈரோடு அருகே உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து

ஈரோடு, ஜூன் 20- ஈரோடு அருகே விளை நிலங் களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விளை நிலத்திற்கு செல்லும் வழித் தடத்தில் பூட்டு போட்டு போராட் டத்தில்  ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்த னர்.  விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள் ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இருப்பினும், விவசாயி களின் எதிர்ப்புகளையும் மீறி மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுவரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளனர். மேலும் விவசாயி களுக்கான பயிர் இழப்பீடு, மரத் திற்கான இழப்பீடு, நில  மதிப்பு வீழ்ச்சிக்கான இழப் பீடு போன்றவற்றை முறையாக நிர்ணயம் செய்து,அதை விவசாயி களிடம் தெரிவித்து, விவசாயிகளி டம் கருத்துக்கேட்டு மட்டுமே முன் நுழைவு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு மாறாக வியா ழனன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே புத்தூர் புதுப்பாளையம் என்ற இடத்தில் உயர் மின்கோபுரத்திற்காக தென் னந்தோப்புகளை அழித்துக் குழி தோண்ட இரண்டு பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் வந்தனர்.இதனையறிந்து அங்கு திரண்டவிவசாயிகள், விளைநி லத்திற்குச்செல்லும் வழியிலுள்ள வாயில் கதவிற்குப்பூட்டு போட்டு, அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்டவிவசாய சங்கங்க ளின் கூட்டியக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் பி.பெருமாள், ஏ.எம். முனுசாமி உட்பட 13 விவசாயி களை காவல் துறையினர் வலுக் கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இதன் பின் பூட்டை உடைத்து பொக்லைன் இயந்திரங்களுடன் விளை நிலத்திற்குள் புகுந்த அதி காரிகளும், காவல்துறையினரும் அங்கிருந்த 34 தென்னை மரங் களை வெட்டி சாய்த்தனர்.தொடர்ந்து போலீசாரின் பாது காப்புடன் மின் கோபுரத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் இந்த அத்துமீறல் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.