tamilnadu

img

ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் : பொதுமக்கள் அச்சம்

ஈரோடு, ஏப்.5-

புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அருகே விளாமுண்டி வனப்பகுதியில்ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதையொட்டி, வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் வன விலங்குகள் இரை தேடியும், தண்ணீர் தேடியும் வெளியேற தொடங்கி உள்ளன. இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை 3 மணியளவில் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலி பாளையம் ஊருக்குள் புகுந்தது. பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பொதுமக்களுடன் வனத்துறையினரும் சேர்ந்து ஊருக்குள் புகுந்த யானையை விரட்டினர். ஆனால் அந்த யானைகள் நல்லூர், ஓடக்காடு பகுதியில் உள்ள முட் புதரில் காட்டில் தஞ்சமடைந்தன. தொடர்ந்து பவானி சாகர் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

;