tamilnadu

img

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 2 வாரம் விடுமுறை

ஈரோடு
தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற மஞ்சள் சந்தையான ஈரோடு மஞ்சள் சந்தைக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 22-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஏல விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த விடுமுறையை ஊரடங்கு முடிவுறும் நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

எனினும் மக்கள் பயன்பாட்டுக்காக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

;