tamilnadu

img

ஈராக் குண்டுவெடிப்பு - 12 பேர் பலி

ஈராக்கில் ஓடும் மினி பஸ்சில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஈராக்கின் பாதுகாப்பு சேவை மையம் வெளியிட்ட அறிக்கையில், கர்பலா நகரை நோக்கி 17 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அச்சமயம் பஸ்சின் இருக்கைக்கு கீழே இருந்த குண்டு திடீரென வெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் 12 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இக்குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மேல் சந்தேகம் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.

;