tamilnadu

img

இலங்கையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது! 

இலங்கை கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இலங்கை கொழும்புவில் பாணந்துரை கடற்கரையில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கடற்படையினரும், அப்பகுதி மீனவர்களும்  கரை ஒதுங்கிய திமிங்கலங்களை  மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் 100 முதல் 120 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 4 திமிங்கலங்கள் இறந்துவிட்டன. ஒவ்வொரு திமிங்கலமும் சுமார் 10 அடி முதல் 25 அடி நீளமுடையவை என தெரிகிறது. திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.