இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச, இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ஆம் தேதி சனிக்கிழமையன்று நடை பெற்றது. இதில் தேர்தலில் 52 சதவீத வாக்குகளை பெற்று பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய மஹாமலுவவில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கோத்தபய ராஜபக்ச, இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்.