tamilnadu

இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை

கொழும்பு, ஏப்.29-இலங்கையில் பல வழிபாட்டுத் தலங்களில் பெண்களைப் பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.தாக்குதல்களுக்குப் பயன்படுத்த தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்த மருது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசியப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.இந்த நிலையில், நாட்டு மக்களின் நலன் கருதி இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணியத் தடை விதிக்கப்படுவதாக அதிபர்மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள் ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், தேசிய மற்றும்மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையானமுகத்திரைகளையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;