tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 11- உடுமலைப்பேடை சங்கர் ஆணவப் படு கொலையில் சம்மந்தப்பட்டவர்களை விடு தலை செய்யபட்டதைக் கண்டித்தும், தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப் பள்ளி மாவட்டங்களில் நடைபெற்ற மூன்று குழந்தைகள் பாலியல் தொந்தரவு செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராம நாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.வெங்க டேஷ் தலைமையில் நடைபெற்றற ஆர்ப் பாட்டத்தில் ஆர்.குருவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பி. செல்வராஜ், தமிழ் புலிகள் இயக்க தலைவர் முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் அய்யாதுரை, மணிக்கண்ணு, ரவி, பூமி நாதன், வாசுதேவன், ராஜா, குப்புசாமி, சந்தி ரன், சத்தியேந்திரன், இராமலிங்கம் ஆகி யோர் கலந்து கொண்டனர். பரமக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி டி.ராஜா, ஆதித்தமிழர் பேரவை மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ராஜா, மற்றும் வேங்தை சிவா ஆகி யோர் கலந்துகொண்டனர். திருவாடானையில் ஏ.நாகநாதன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்து ராமு, ஆதிரத்தினம், அருள்சாமி, ஜெய காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். கமுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.முத்துவிஜயன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வசந்த், இன்னாசி முத்து உள்ளிட்ேடார் கலந்துகொண்டனர்.