tamilnadu

img

குடிநீர்-வீட்டு வரி செலுத்த 3 மாதம் அவகாசம்

கோவை, மார்ச் 31- தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் செலுத்த 3 மாத  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலொசனைக் கூட்டத் திற்குப் பின்  செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “தமிழகம் முழுவதும்  மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி  உள்ளிட்ட வரிகளை செலுத்த காலஅவகாசம் ஜூன்  மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது” என்றார். கேரளாவில் உள்ள தமிழர்களுக்குத் தேவை யான உதவிகளை செய்ய அங்குள்ள அமைச்சர்களி டம் பேசியிருப்பதாக அவர் தெரிவித்தார்.