tamilnadu

img

ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதா? - சு.வெங்கடேசன் எம்.பி., மறுப்பு

மதுரை, ஏப்.19- மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக ஆதாரமற்ற அவ தூறுகளை பரப்பு விஷமிகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்ட னம் தெரிவித்தள்ளார். அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு: கடந்தாண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும் மதுரை யில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெற்றுவரும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் ஒரே நேரத்தில் வந்தன. அப்போ தைய மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்திற்கு சித்தி ரைத்திருவிழாவின் பெருமை குறித்து உரிய நேரத்தில் தெரி விக்காத காரணத்தால் இவ்வாறு நேர்ந்தது. அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நானும் மதுரைத் தொகுதி யில் மட்டுமாவது வாக்குப்பதிவை ஒத்திவைக்குமாறு கோரி னோம். ஆனால் அது ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் சித்திரைத்திருவிழாவை ஒத்திவைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டது போல எந்தவித ஆதா ரமுமற்ற ஒரு அவதூறை போட்டோஷாப் மூலம் உருவாக்கி எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பரப்பினர். இதை உடனடியாக மறுத்ததோடு காவல்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இதே போன்று பல்வேறு அவதூறுகளை பரப்பியபோதும் இத்தகைய விஷமப்பிரச்சாரத்தை புறங்கையால் நிராகரித்து மதுரை தொகுதி மக்கள் மகத்தான வெற்றியை தந்தனர். இத்தகைய அவதூறுகளை மக்கள் சேவையால் மட்டுமே அர்த்தமிழக்கச் செய்ய முடியும் என்ற முறையிலும் வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதே ஒரே குறிக்கோள் என்ற அடிப்படையிலும் நமது செயல்பாடு அமைந்துள்ளது.

தற்போது, கொரோனா எனும் கொடிய தொற்றுநோயின் பிடியில் நாடே சிக்கியுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அல்லும் பகலும் அயராது உழைத்து மக்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை செய்துவருகிறோம். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட விஷமிகள் இந்தாண்டும் கடந்தாண்டு போன்று இழிவான, அருவருக்கத் தக்க செயல்களில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் வழக்கம் போல நடைபெறுமென்றும் காணொலி காட்சி மூலம் அது ஒளிபரப்பப்படுமென்றும் மக்கள் கூடுவது தவிர்க்கப்படுமென்றும் கோவில் நிர்வாகம் அறி வித்துள்ளது. தேரோட்டம் நடைபெறாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். ஆனால், திருக்கல்யாண நிகழ்வையும் ரத்து செய்ய வேண்டுமென்று நான் கூறியிருப்பது போன்ற பொய்யான தகவலை போட்டோஷாப் மூலம் சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் ஆதாரமற்ற, அடிப்படையற்ற அவதூறாகும்.

மதுரை மாவட்டத்திற்கு மட்டுமின்றி தென் மாவட்டங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்க்கும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் இந்தாண்டு நடைபெறாதது உண்மையில் வருந்தத்தக்க ஒன்றாகும். கொடிய நோய்த் தொற்றிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு மத விழாக்கள் உட்பட அனைத்தும் வழக்கம்போல நடைபெற வேண்டுமென்பதே அனைவரது விருப்பமுமாகும். ஆனால், வேறு வேலையற்ற விஷமிகள் பொய்யான செய்திகளைப் பரப்புவதில் சுகம் கண்டு வருகின்றனர். மக்களுக்குத் தேவையான நேர்மையான சேவை மூலம் இதை நிராகரிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையிடம் புகாரளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.