உயர்வு புதுதில்லி, மார்ச் 2- வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் நடத்திய வன்முறையில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு தில்லியின் ஜாபராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதி களுக்கும் பரவியதில் ஏராளமானோர் கொல்லப் பட்டதுடன், சுமார் 200 பேர் காயமடைந்தனர். கடந்த ஒரு வாரமாக இந்த வன்முறையில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்து வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. 38 பேர் குருதேஜ் பகதூர் மருத்துவமனை யிலும், ஐந்து பேர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையிலும், மூன்று பேர் லோக் நாயக் மருத்துவமனையிலும், ஒருவர் ஜக் பர்வேஸ் சந்தர் மருத்துவமனையிலும் இதுவரை உயிரிழ ந்துள்ளதாக அந்த செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு
இதனிடையே, தில்லி வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்த உளவுத்துறை அதி காரி அங்கித் ஷர்மாவின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள தாகவும் ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. அங்கித்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் உறுதி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றொரு போலீஸ் தலைமைக் காவலரான ரத்தன் லால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.