tamilnadu

img

நுண்நிதி நிறுவனத்தின் அத்துமீறல்... ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள வரவனிகிராமத்தைச் சேர்ந்தவர் சகாயமாதா. அகில இந்திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர். இவர் சமஸ்தா என்ற நுண் நிதி நிறுவனத்தில் கடன்பெற்றுள்ளார். கொரோனா காலத்தில் கடனை திருப்பிச்செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நுண்நிதி நிறுவனம்சகாயமாதாவை பணம் கட்டச் சொல்லி தொலைபேசி வழியாக மிரட்டியுள்ளது. உள்ளூர் மக்கள் சிலரை தூண்டி விட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சகாயமாதாவை தாக்கியவர்கள் மீதும், நுண்நிதி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருவாடானை தாலுகா செயலாளர் அருள்சாமி  தலைமையில் ஆர்எஸ் மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆதிரத்தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.சேதுராமு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் நா.கலையரசன், மனோகரன், பால்ராஜ்,சிவசாமி உட்பட ஏராளானோர் கலந்துகொண்டனர்,