திரைக்கலைஞர் ரோகிணி குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஜூலை 31 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், திரைக்கலைஞருமான ரோகிணி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார். மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.அரவிந்த்சாமி, மாணவர் சங்க நிர்வாகிகள், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச்செய லாளர் என்.குருசாமி, தமுஎகச மாநில நிர்வாகிகள் கவிஞர் களப்பிரன், பிரளயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கல்லூரி மாணவிகளிடம் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவிகள் கையெழுத்து இட்டனர். பின்னர் திரைக்கலை ஞர் ரோகிணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை யை நான் கண்டிக்கிறேன். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. எந்த காலத்திலும், எல்லா இடத்திலேயும் நுழைவுத் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, ஏழை குழந்தைகளுக்கு இது எதிரானது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். சம கல்வி, சம பயிற்சி இல்லாத நிலையில் குழந்தைகள் எப்படி நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும், பட்டப் படிப்பில் சேர முடியும். இதுகுறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவர் 10 ஆண்டு காலமாக குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். எனவே குழந்தைகள் எந்த சூழ்நிலையில் எப்படிப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும். அதிகமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். அதனால் அவர் கூறிய கருத்து உண்மை. அவருக்கு எதிராகப் பேசுபவர்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் சொல்கிறேன்.
நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என எல்லாமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது. அவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக எதுவும் இல்லை. மத்திய அரசு எல்லாவற்றையும் ஒரே விதமாக கையாளப் பார்க்கிறது. சமஸ்கிருதம், இந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவா கொள்கை யை மாணவர்களிடம் புகுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். இந்துத்துவாவின் கொள்கைகளை கல்வியிலும் பின்வாசல் வழியாக புகுத்துவதற்கு பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதற்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.