tamilnadu

அடையாளத்தை அழிக்கும் முயற்சி!

வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பேசு கின்ற மொழியாக திகழ்ந்தது நம் தாய்மொழி. சீரும் சிறப்பும் பெற்று இலக்கண நெறியுடன் உலா வரு கின்ற நமது தமிழ்மொழி, தற்போதைய காலச் சூழ்நிலையில் சில இடங்களில் மத்திய அரசால் தவிர்க்கப்படுவதை நாம் காண முடிகிறது. இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி. அறிஞர் கால்டுவெல், தமிழ்மொழியை எம்மொழித் துணையும் வேண்டாது தனித்து இயங்கும் மொழி என்று குறிப்பிட்டார். தமிழர்கள் மட்டுமல்லாது ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற அயல் நாட்டவர்களும் தமிழைப் போற்றி னர். அந்த அளவிற்கு தமிழ்மொழியா னது அனைவரது மனதிலும் இனிமை யாய் இருந்து இன்பம் தரக்கூடியது. அத்தகைய தமிழ்மொழியை கொஞ் சம் கொஞ்சமாக மறைய வைக்க எண்ணும் முயற்சி நடைபெறுகிறது.  சமீபத்தில் தபால்துறைத் தேர்வில் கேள்விகள் தமிழ்மொழியில் இடம்பெறாது ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்பட்டு தேர்வு நடந்தது தமிழ்மொழிக்கே தலை குனிவு. அதற்கு கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டதால் பிறகு மீண்டும் தமிழ்மொழியில் கேள்வி கேட்கப்பட்டு மறுபடியும் தேர்வு நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 

இந்த பிரச்சனை முடிந்து அடுத்த தினத்திலே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஹிந்தியைப் பதிவு செய்திருந்த நிலை வெளிப்பட்டது. இது தமிழ்மொழியை தலைகுனிய வைக்கின்ற செயல். எங்கேனும் தமிழ்மொழி ஹிந்தி எழுத்தினை தூக்கி விட்டு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தியது உண்டா? அப்படி ஏதேனும் நிகழ்வு நடந்தது உண்டா? அது தான் தமிழ் மொழியின் பெருமை. எம் தமிழ்மொழியானது யாரையும் வீழ்த்திவிட்டு மேலே வந்த மொழி அல்ல. ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், நாளாக நாளாக பாரதி சொன்னது போல “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் எல்லோருடைய மனதிலும் வந்துவிட்டது. இதற்கு தீர்வு தான் என்ன? அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது. நாம் நம் தாய்மொழியான தமிழ்மொழி தான் சிறந்தது, உயர்ந் தது என கொண்டாட வேண்டும். நம் தமிழ்மொழியை விட்டுக்கொடுத்தால் நாம் பிறரிடம் அடிமையாக வாழப் போவதும் உறுதிதான். அன்று சிந்திய இரத்தம் சுதந்திரம் பெற்றுத் தந்து நம் அனைவரையும் சுதந்திரமாய் உலா வரச் செய்து கொண்டிருக்கிறது. எனவே இப்போது நாம் நம் மொழியை பாதுகாக்க போராடியே தீர வேண்டும். 

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நம்மை அடைத்து வைத்தால் தான் அடிமைத் தனம் என்பது அல்ல. நம் அடையா ளத்தினை அழிப்பதும் நம்மை அடிமைப்படுத்துவதற்கு ஒரு அறிகுறி என்பதை உணர்தல் வேண்டும். ரஷ்ய கவிஞர் இரசூல் கம்சதோவ் “நாளை என் தாய்மொழி சாகும் என்றால் நான் இன்றே செத்துவிடுவேன்”  என்று சொன்னது தாய்மொழி மீது அவர் கொண்ட காதலை வெளிப் படுத்துகிறது. எனவே தமிழ் மொழியை அழித்திடும் முயற்சிகளை தடுத்திடு வது இன்றியமையாதது.

- கவிஞர் அரபியா ஜாஹிர் உசேன்