tamilnadu

img

திருச்சியில் தமுஎகச கல்வி உரிமை மாநாடு: அனிதா- கீர்த்தனா நினைவு நீட் எதிர்ப்புச் சுடர்

பெரம்பலூர், ஆக.22- தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுவது மாக திரும்பப் பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு 23-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்து விழிப்புணர்வுச் சுடர் பயணம் நடைபெற்றது.  பெரம்பலூரில் இருந்து நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அனிதா மற்றும் கீர்த்தனா ஆகிய மாணவிகளின் நீட் எதிர்ப்புச் சுடர் பயணம் வியாழன் மாலை துறைமங்கலத்தில் துவங்கி பாலக்கரை வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. பின்னர் சுடர் பயணம் திருச்சியை நோக்கி சென்றது. நிகழ்ச்சியில், தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.செல்வகுமார் தலைமை வகித்தார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் சி.கரு ணாகரன் சுடர் பயணத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின். எ.கலையரசி, எஸ்.பி.டி.ராஜாங்கம், எ.கணேசன், பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, திராவிடர் கழகம் தங்கராசு, அறிவியல் இயக்கம் ராமர், தமுஎகச மாவட்ட தலைவர் அகவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.