சென்னை, ஆக. 8- தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களி லும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவி யரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும், ‘தமிழகத்தில் இதுவரை பெய்யாத அளவிற்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும், இது குறித்து ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.