திருவண்ணாமலை, டிச. 5- திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு நான்கு நாட்க ளுக்கு இரண்டாயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 10 ஆம் தேதி தீப விழா நடைபெறுவதை முன் னிட்டும், 11 ஆம் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும். அதன்படி, சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகளும், தாம்ப ரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண் ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப் பத்தூர், ஆரணி, ஆற்காடு பகுதியி லிருந்து ஆயிரத்து 112 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். திருச்சியிலிருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம், பெங்களூரு, ஓசூர் பகுதிகளிலிருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவையில் இருந்து 122 பேருந்துகளும், மதுரையிலிருந்து 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.