சென்னை, மார்ச் 18- சென்னைக்கு அருகாமையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் அமைக்கப்பட்டு வரும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கப் பணி கள் 97 விழுக்காடு முடிந்துவிட்டன. எஞ்சிய 3 விழுக்காடு பணி 3 மாதத் தில் முடிக்கப்பட்டு நடப்பாண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் தண்ணீர் வழங்கப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 18) நடைபெற்ற பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.