tamilnadu

img

பொங்கல் விழாவையொட்டி போர் தேங்காய் உடைக்கும் போட்டி

கஜா புயலில் அழிந்த  தென்னை மரங்களை  நினைவு கூர்ந்த  விவசாயிகள் 

புதுக்கோட்டை, ஜன.16- தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது போல செரியலூரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போட்டி நடத்தப்பட்டது. பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு முதல் பரிசு ரூ. 2 ஆயிரத்து ஒன்றும், சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.  தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை  நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சி யை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடு களை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத் திலும் ஏதாவது வித்தியாசமான விநோதப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செரு வாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிரா மங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போர் தேங்காய் போட்டி நடத்தப்பட்டு வரு கிறது. அதாவது எதிர் எதிர் திசை யில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோத லில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை  விலை கொடுத்து வாங்குகின்ற னர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.  இதுவரை அனைத்து ஊர்களி லும் யார் வேண்டுமானாலும் விரும்பிய வர்களின் தேங்காய்களுடன் மோதிக் கொண்டு உடையும் தேங்காயை எடுத்துச் செல்லும் விளையாட்டு நடந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக  செரியலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்களால் களம்  அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங் காய்க்கு பரிசும் அறிவித்திருந்தனர்.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேங்காய்களுடன் வந்து பதிவு செய்து போட்டியில் கலந்துகொண்ட னர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதியில் பல தேங்காய்களை உடைத்து செரியலூர் இராஜ.பழனிவேல் தேங்காய் முதல் பரிசை ரூ. 2 ஆயிரத்தி ஒரு ரூபாய் (1) பெற்றார்.  தஞ்சாவூர் மாவட்டம் மாவடு குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துக் குமாரின் தேங்காய் இரண்டாவது பரிசு ரூ. ஆயிரம் வென்றது. மேற்பனைக்காடு கண்ணன் தேங்காய் மூன்றாவது பரிசு வென்றது. பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.  இது குறித்து போர் தேங்காய் போட்டியாளர்கள் கூறும் போது.. இது எங்களின் சந்தோசத்துக்காக விளையாடும் போட்டி. இந்த போட்டியால் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இருக்காது. கைகளில் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம். போர் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம். கடந்த ஆண்டு ரூ. 300, 400 க்கு கிடைத்த தேங்காய் கடந்த ஆண்டு கஜா புயல் தென்னை மரங்களை சாய்த்ததால் இதற்காக ஒதுக்கப்பட்ட தென்னை மரங்களும் அழிந்து விட்டன. அதனால் இந்த தேங்காய் விலை ரூ. ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

 

;