tamilnadu

img

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தமிழக முதல்வர் தலையிட வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 6- அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களின் பணியிட மாறுதலுக்கான இந்த ஆண்டு கலந்தாய்வுகள் ஜூலை 8 முதல் தமிழகம் முழுவ தும் நடைபெற உள்ளது.   “தற்போது பணிபுரியும் பள்ளி யில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தி ருந்தால் மட்டுமே இந்த கலந்தாய்வு களில் கலந்துகொள்ள முடியும்”  என்று தமிழக அரசு விதிகளை  வகுத்துள்ளது. இதனால், வசிப்பி டத்திலிருந்து தொலைதூரங்களில் சொல்ல முடியாத துயரங்களுடன் ஏற்கனவே பணியாற்றும் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பையும், மன அழுத்தத்தையும்  உருவாக்கி யிருப்பதாக, எமது சங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன.  பணியிட மாறுதல்களுக்கான முன்னுரிமை விதிகளை ஒரு சிலர்  முறைகேடு செய்ய பயன்படுத்து வதை தடுப்பதற்கே இந்த விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு எமது சங்க நிர்வா கிகளிடம் தெரிவித்தனர்.  

முறை கேடுகளை தவிர்க்கவும், உண்மை யிலேயே பாதிப்புடன் இருக்கும்  மாற்றுத்திறனாளி ஆசிரியர்க ளுக்கு, இந்த விதி மேலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வும்,  பணியிட மாறுதல் கோரும் ஆசி ரியரின், வசிப்பிட உண்மை தன்  மையை, குடும்ப அட்டை உள்ளிட்ட  உரிய சான்றுகள் மூலம் உறுதி  செய்து கலந்தாய்வில் பங்கேற்க விதிகள் வகுக்க வேண்டும் என  அப்போதே எமது மாற்றுத்திற னாளிகள் சங்கம் தெரிவித்த கருத்து  அதிகாரிகளால் ஏற்கப்பட்டது. எனவே இந்தாண்டும்  அந்த கோரிக்கையை ஏற்றுகொண்டு  மாற்றுத்திறனாளிகள் வசிப்பிட உண்மைத் தன்மையை உரிய  ஆவணங்களின் மூலம் உறுதி செய்துவிட்டு, பணியிட மாறுதல் களில் பங்கேற்று பயன்பெற உரிய  உத்தரவுகளை தமிழ்நாடு முதல மைச்சர் பிறப்பிக்கவேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநி லத்தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்பு ராஜன் ஆகியோர் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.