தஞ்சை, புதுகை, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்
தஞ்சாவூர், ஆக.1- தேசிய மீன்வளக் கொள்கை வரைவு மசோ தாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதி மீன வர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாத புரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டி னம் வடக்கு சங்க அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட் டத் தலைவர் சின்ன அடைக்கலம், பாலமுரு கன், இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் கோபி, ராஜா, தஞ்சாவூர் மாவட்டம் ராஜ மாணிக்கம், வடுகநாதன், இப்ராஹிம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான மீனவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.
மேலும், இது அனைத்து மீனவர் கூட்ட மைப்பு தலைவர் ராமேஸ்வரம் என்.ஜெ. போஸ், செயலாளர் ஜேசுராஜா, பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் மண்ட பம் சங்கத் தலைவர் ஜாஹிர் உசேன், செய லாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கருத்துரையாற்றி னர். இக்கூட்டத்தில், “அண்டை மாநிலங்க ளில் வழங்குவது போல, மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கி, மானி யத்தொகையை பில்லிலேயே கழித்து தரும் முறையை தொடர வேண்டும். மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை கைவிட வேண்டும். இத்திட்டம் ஆக.1 (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்ற அரசின் முடிவைக் கண்டித்து தஞ்சை, புதுக்கோட்டை, இராம நாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல், வேலை நிறுத்தம் செய்வது, மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடு வது எனவும், தமிழகம் முழுவதும் உள்ள மீன வர்களை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை யும், உரிமைகளையும் பாதிக்கும் தேசிய மீன்வள கொள்கை-2020 வரைவு மசோதாவை யும், மீனவர்களின் பாரம்பரிய தொழில் முறை யையும், உரிமைகளையும் பறித்திட வழி வகை செய்யும் தேசிய கடல் மீன் வள ஒழுங்கு முறை கொள்கை வரைவு - 2020 ஆகிய வற்றை கைவிட வேண்டும். டீசல் மீதான வரிவிதிப்பை ரத்து செய்து, எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும்” என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மீனவ தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசி மானிய விலையில் டீசல் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.