விஷமிகள் செயலுக்கு சிபிஎம் கண்டனம்
கடலூர், மே 1- கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலையில் வெள்ளிக்கிழமை அதி காலையில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், பேப்பரில் இந்திராகாந்தி குறித்து ஏதோ எழுதி வைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி யில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
கொரோனோ வைரஸ் தொற்று பரவி நாடே தொடர் முடக்க உத்தரவால் அனைத்து பகுதி மக்களும் கடுமையான இன்னலை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மாமேதை அம்பேத்கர் திருவுருவச்சிலை யில் சில விஷமிகள் செருப்பை கையில் மாட்டி சென்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித் தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண் டிக்கிறது .
இந்த நடவடிக்கை திட்ட மிட்டு செய்யபட்டதாக தெரிய வரு கிறது. சிலைக்கு அருகில் உள்ள கடைகளில் உள்ள கேமராக் களை கவனித்து சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை அடை யாளங்காண வேண்டும். சம்பந் தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை யும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு ஆறுமுகம் தெரி வித்திருக்கிறார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் மாவட்டச் செய லாளர் வி.சுப்புராயன் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,” இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்து பதற்றத்தை தணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
விசிக
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமா தானப்படுத்தி குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி, மாலை அணிவித்து விட்டு கலைந்து சென்றனர். ஊரடங்கு உத்தரவை அடுத்து மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவ லகத்தின் எதிரில் 24 மணி நேர மும் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.