சென்னை,பிப்.12- இலங்கை சிறையில் இருந்த தமி ழக மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்த னையுடன் விடுவிக்கப்பட்டனர். விடு தலை செய்யப்பட்ட 11 மீனவர்க ளும் விரைவில் தமிழகம் வந்தடை வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படு கிறது. ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி ஸ்வீட்டர் என்பவ ருக்கு சொந்தமான ஒரு விசைப்பட கில் ஸ்வீட்டர், ரூமஸ், அக்வின், ரவிங்ஸ்டன், ராஜ், ராமர், டேவிட், ஆறுமுகம், சேவியர், முனியசாமி உள்பட 11 பேர் மீன்பிடிக்க சென்றி ருந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் நடுக்கட லில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன், 11 மீனவர்களையும் விடுதலை செய்த துடன் படகை அரசுடைமையாக்குவ தாக உத்தரவிட்டார். மேலும் இனி அந்த 11 மீனவர்க ளும் மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்து கைது செய்யப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கடும் நிபந்தனை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தமிழகம் வந்து சேருவார்கள் என கூறப்படுகின்றது.