tamilnadu

img

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன செயற்கைகால்

சென்னை, டிச. 10- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தப் பட்டது. திருவள்ளூரைச் சேர்ந்த வர் முனிவேல். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர் களது மகன் ஹேம்நாத் (25). இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி மோட்டர் சைக்கிள் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும்போது பின்புறமாக வந்த நான்கு சக்கர வாகனம்  மற்றும் சாலை தடுப்பின் இடையே இடித்து வலது தொடை நசுங்கியது. இதைத்  தொடர்ந்து அவர் அருகாமை யிலிருந்த தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். முதல் உதவிக்குப் பின் சென்னை ராஜீவ்காந்தி  அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து, வலது காலிற்குச் செல்லும் ரத்த நாளம் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது தெரிய வந்தது. இதனால் காலை முட்டிக்குமேல் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய அவசி யம் ஏற்பட்டது. காயம் மிக  ஆழமாக இருந்ததால் ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சை துறையில் மேற்கொண்டு சிகிச்சை அளித்துச் சரி செய்யப்பட்டது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை  மருத்துவர்கள் ஜெ.ஜெகன் மோகன், எஸ்.ஸ்ரீதேவி, மயக்கவியல் துறை பேராசிரி யர்  வெள்ளிங்கிரி தலைமை யில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முதலில் காயம் சுத்தம் செய்யப்பட்டு பின்பு காயத் திற்கு வேகம் தெரபி (சீழ் உறிஞ்சும் உபகரணம்) நான்கு முறை முதல் அமைச்  சரின் விரிவான காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் அளிக்கப்  பட்டது. இந்த சிகிச்சைய ளிக்கை சராசரியாகத் தனி யார் மருத்துவமனையில் ஒரு  முறைக்கு 10,000 வரை செல வாகும் என்பது குறிப்பிடத்  தக்கது. இந்த முறையில் காயம் காயம் அறுவை சிகிச்சை மூலம் மூடப்பட்டது.  காயம் முழுமையாக ஆறிய பின் 1,77,000 மதிப்புள்ள நவீன செயற்கைக் கால்  நோயாளிக்கு முழுவதுமாக  இலவசமாக அளிக்கப்பட் டது. மேலும் செயற்கை கால் கொண்டு நடக்க  உடற்பயிற்சி அளிக்கப் பட்டது. இப்பொழுது அவ ரால் மற்றவர்களைச் சார்ந்தி ராமல் தனது தினசரி தேவை களைப் பூர்த்தி செய்ய முடி கிறது.