ஈரோடு, ஜூன் 7- 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஏழாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரி வித்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரி யர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டுள்ள நிலை யில், விரைவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி களிலும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.