tamilnadu

img

‘நல்ல காரியம் செய்தாய் மகளே!’

சிதம்பரம், மார்ச் 31- உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தி யாவையும் விட்டு வைக்க வில்லை. இதனால் இந்தியாவில்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தமிழகத்திலும் கடு மையாக அமல்படுத்தப் பட்டு வரு கிறது.  இந்நிலையில், அத்தியாவ சிய பொருட்க வாங்க வெளியில் வரும் பொது மக்கள் மாஸ்க்  அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பல பேரிடம் காசு இருந்தும் மாஸ்க் கிடைக்காததால் அதனை அணிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் 5ஆம்  வகுப்பு படிக்கும் சி.கொத்தங்குடி ஊராட்சி சரஸ்வதி அம்மாள் நக ரைச் சேர்ந்த மாணவி ராகினிஸ்ரீ பள்ளி விடுமுறை நாளில் 50க்கும் மேற்பட்ட முக கவசம் (மாஸ்க்) அவரே தைத்து அவர் வசிக்கும் பகுதியில் வழங்கியதை அப்ப குதி மக்கள் வெகுவாக பாராட்டி  வருகிறார்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து மாணவி கூறுகை யில் “தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ள  பள்ளிகளுக்கு விடு முறை விட்டுள்ளது.  தொலைக் காட்சியில் செய்திகளை பார்த்த போது மாஸ்க் தட்டுப்பாடு உள்ளது தெரிந்தது. அதன் பிறகு அம்மாவின் ஆலோசனையின்படி தையல் இயந்திரத்தில் மாஸ்க் தைத்து  எங்கள் பகுதியில் உள்ளவர்க ளுக்குகொடுத்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்  கள் வாங்க வெளியே செல்ப வர்கள் மாஸ்க் அணிந்து செல்ல  வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மேலும்,100 மாஸ்க் தயார் செய்து வருகி றேன்” என்றார். ராகினிஸ்ரீ தீக்கதிர் நாளிதழின் சிதம்பரம் செய்தியாளர் காளிதாசின் மகள் ஆவார்.