tamilnadu

img

எண்ணூர் துறைமுகத்திற்கு மீண்டும் குறி

லாபமீட்ட வாய்ப்பு இருந்தும் சீரழிக்க முயற்சிப்பதா?

துறைமுக ஊழியர்கள் கொதிப்பு

சென்னை, மே 15-எண்ணூர் காமராஜர் துறை முகத்தின் மொத்தப் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் இத்துறைமுகத்தின் எதிர்காலமேகேள்விக்குறியாகிவிடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக காமராஜர் போர்ட் எம்பிளாய்ஸ் யூனியன் மற்றும் மெட்ராஸ் போர்ட் & டாக் எம்பிளாய்ஸ் யூனியனின் துணைத் தலைவரும், அகில இந்திய துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தி.நரேந்திரராவ் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் கப்பல்போக்கு வரத்து அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலே கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் “நிதி ஆயோக்” அமைப்பு,இத்துறையின் கீழ் இயங்கும் லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய கப்பல் கழகம் (ளுhiயீயீiபே ஊடிசயீடிசயவiடிn டிக ஐனேயை), இந்திய கடல் தூர்வாரும் கழகம் மற்றும் காமராஜர்துறைமுகக் கழகம் (Dredging Corporation of India), (Kamarajar Port Ltd )  போன்றவற்றில் அரசுக்கு சொந்தமான அதன் மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க சிபாரிசு செய்தது. அதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளும் நடந்துவந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான், காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றி வரும்அதிகாரிகளும், ஊழியர்களும்பெருந் திரள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தனர்.  போன்றவற்றில் அரசுக்கு சொந்தமான அதன் மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க சிபாரிசு செய்தது. அதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளும் நடந்துவந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான், காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றி வரும்அதிகாரிகளும், ஊழியர்களும்பெருந் திரள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தனர். 

நடந்தது என்ன?

சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்த இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற சரக்குகளை நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் கையாள திட்டமிடப்பட்டு இத்துறைமுகத்தின் துணை நிறுவனமாக (ளுயவநடடவைந ஞடிசவ) எண்ணுரில் 2001-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டதுதான் இன்றையஎண்ணூர் காமராஜர் துறைமுகம்.ஆனால் அன்றைய ஆட்சியாளர்களின் கொள்கை முடிவினால் இத்துறைமுகத்தை பெருந்துறைமுகங்களுக்கான ((Major Port Trust Act 1963)  சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் இந்தியகம்பெனிகள் சட்டத்தின் கீழ் (ஊடிஅயீயnநைள ஹஉவ 1956) பதிவு செய்யப் பட்டு இயங்கத்தொடங்கியது. அன்றுமுதல் இதன் மொத்த பங்குகளில் 67 சதவிகிதம்  மத்திய அரசிடமும், 33 சத விகிதம் சென்னை துறைமுகத்திடமும் இருந்துவருகிறது. இதற்கிடையில் சென்ற 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை துறை முகத்தில் நிலக்கரி போன்ற சரக்குகளை கையாளக்கூடாது என்றும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக கூறி இச்சரக்குகள் அனைத்தையும் அருகாமையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.இந்நிலையில் இவ்விரண்டு துறைமுகங்களில் உள்ள தொழிற்சங்கங்களும், அதிகாரிகளும் இந்நிறு வனத்தின் நிர்வாகத்தலைமையிடமும் பலமுறை மத்திய அரசிடமும் இவ்விரண்டு நிறுவனங்களையும் பாதுகாக்கவேண்டும் என்று வலி யுறுத்தி வந்ததால் எடுக்கப்பட்ட முடிவுதான் சென்னைத் துறைமுகம் ஏற்கனவேதன்னிடம் வைத்துள்ள 33 சதவிகித பங்குகளுடன், மத்திய அரசு தனியாருக்கு விற்கத் திட்டமிட்டிருந்த காமராஜர் துறைமுகத்தின் 67 சதவிகித பங்குகளையும் வாங்கிவிடவேண்டும் என்பது. அப்படி யான முடிவிற்கு மத்திய அரசும் சென்ற 28.02.2019 அன்று தனது ஒப்புதலையும் வழங்கிவிட்டது. 

வாய்ப்புகள் இருந்தும்...

இதனால் காமராஜர் துறைமுகத்தின் இலாபமான ரூ.400 கோடி தனி யாருக்கு போவதைத் தடுத்து, அதனைசென்னைத் துறைமுகம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும். இதன்வாயிலாக இங்கி ருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓய் வூதியதாரர்களின் தேவைகளையும் பூர்த்திசெய்ய இயலும். அதே நேரத்தில் காமராஜர் துறைமுகம் தனியார் கை களுக்கு போவதும் தடுக்கப்பட்டு இங்கு பணியாற்றும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் பணிப்பாதுகாப்பற்ற தன்மையிலிருந்தும் விடுவிக்கமுடியும்.சென்னைத் துறைமுகம், Major Port Trust Act 1963  என்கிற இந்திய பெருந்துறைமுகங்களுக்கான சட்டத்தின் கீழ்செயல்படும் நிறுவனம். இது காமராஜர்துறைமுகத்தின் முழுப் பங்குகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் சூழ்நிலை யில், ஏற்கனவே கம்பெனிகள் சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வரும் அரசுக்குச் சொந்தமான “பொதுத்துறை நிறுவனம்” என்ற தன்மை யை காமராஜர் துறைமுகம் இழக்கப்போவ தில்லை. இத்தகைய வாய்ப்பும், ஒப்புதல்களும் இருக்கும் போதிலும் கூட, இத்துறைமுகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது என ஏற்கனவே எடுத்திருந்த பழைய முடிவினை இப் போது அரசு செயல்படுத்திட, நிதி ஆயோக் பரிந்துரை என்ற பெயரில் முயற்சித்தால் மீண்டும் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரி களின் பணிப்பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகிவிடும்தமிழக அரசும் பொதுமக்களும், எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருந்து காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாவதிலிருந்தும், சென்னைத் துறைமுகத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.