tamilnadu

img

‘நீட்’ சிறப்பு சட்டமன்றக் கூட்டத்துக்கு தயார்: முதல்வர்

சென்னை, ஜூலை 17- நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் சட்டப்  பேரவையின் சிறப்புக் கூட்டம்  கூட்டப்படும் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் புத னன்று(ஜூலை19) கேள்வி நேரம்  முடிந்ததும் நீட் தேர்வு மசோத  தாக்கல் திருப்பி அனுப்பப் பட்டது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து  பேசிய எதிர்க் கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின், “நீட் மசோதாக் களையும் 2017ஆம் ஆண்டு செப்  டம்பர் 22 ஆம் தேதியே குடியரசு  தலைவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதை மத்திய  உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை சுட்டிக்காட்டினார்.” குடியரசு தலைவர் நிராக ரித்து 21 மாதங்கள் கடந்த போதி லும், கடிதம் எழுதி என்ன பயன்?  என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த மசோதாக்களை மீண்டும் இந்த கூட்டத் தொடரிலேயே நிறை  வேற்றி அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒப்புதல் வாக்குமூலம்!

இதற்கு பதில் அளித்த சட்டத்  துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  “நீட் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததும் திருப்பி அனுப்பியதும் உண்மை. இதற்கு காரணம் கேட்டு 12 முறை  மத்திய அரசுக்கு கடிதம் எழுதி யும் அவர்களிடம் பதில் வர வில்லை. இந்த நிலையில், மீண்  டும் அதே மசோதாவை அனுப்பி னால் திருப்பிதான் அனுப்பு வார்கள் என ஆவேசமடைந்த அவர், மத்திய அரசுக்கு இறுதி யாக ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம் அதற்கும், உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் வழக்கு தொடரலாம்” என்றார். இந்த விவாதம் தொடர்ந்து நீண்டே சென்றது. அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலி ருந்து விலக்கு அளிக்க  பிரதமரி டம் உரிய அழுத்தம் கொடுக்கப் பட்டது. 12 வது முறையாக நினை வூட்டல் கடிதம் எழுதப்பட்டுள் ளது. இதற்கு பிறகும் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில், சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.”

முரண்பட்ட தகவல்!

ஆவேசமாக பேசிக்கொண்டி ருந்த அமைச்சர் சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்தி ரத்தின் வாக்குமூல கடிதத்தை படித்ததில் ‘நிறுத்தி வைப்பு’ (Withhold) என்று இருப்பதாக  கூறினார். எதிர்க் கட்சித் தலைவர்  படித்த கடிதத்தில் நிராகரிப் பட்டது (Withhold rejected) என்றும் இருந்ததை சுட்டிக் காட்டி னார்.  எனக்கு கிடைத்த கடிதத்தை தான் படித்தேன் என்று கூறிய  அமைச்சர், இருந்தாலும் எதிர்க்  கட்சித் தலைவர் சுட்டிக்காட்டி யதை ஏற்றுக்கொண்டு அந்த கடி தத்தை சரி பார்த்துக்கொள்வதாக சமாளித்தார்.