பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 4) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருநின்றவூர், தண்டலம், மெய்யூர், சின்னம்பேடு, கும்மிடிப்பூண்டி, கொடிப்பள்ளம், மைலாப்பூர், கைவண்டூர் உள்ளிட்டு பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொன்னேரியில் மாவட்டத் தலைவர் டி.மதன் தலைமையில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். திருநின்றவூரில் மாவட்ட செயலாளர் எஸ்.தேவா உட்பட 10பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.