tamilnadu

img

குப்பைகளை தரம் பிரிக்காத மக்களுக்கு அபராதம்!

சென்னை,டிச.12- குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்காத மக்க ளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என  திடக்கழிவு மேலாண்மைக் குழுத் தலை வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மாநகரம் மற்றும் நகரப்  பகுதிகளில் நாளுக்கு நாள் திடக்கழிவு கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  அவற்றை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் அரசு பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாகக் கொட்ட அனைத்து பகுதி களிலும் இரண்டு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் குப்பைகளை அவ்வாறாக தரம் பிரித்து கொட்டுவதில்லை என்பதால் அனைத்து குப்பைகளும் ஒன்றாக கலந்தே கிடக்கின்றன. இந்நிலையில் திடக்கழிவு சுத்திகரிப்பு குறித்த மாநில கண்காணிப்புக் குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய  திடக்கழிவு மேலாண்மை குழுத் தலை வர் ஜோதிமணி குப்பைகளை தரம் பிரித்து தராதவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம்  உள்ளதாகவும், பொதுமக்கள் குப்பை களை தரம் பிரித்து கொடுத்தாலே திடக் கழிவு மேலாண்மையில் பிரச்சனைகள் ஏற்படாது எனவும் கூறினார்.