பழனி, ஆக.28- பழனி முருகன் கோவிலின் உபகோயில்களில் நடைபெறவிருந்த திருவிழாக்கள் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலின் முக்கிய உபகோ வில் பெரியநாயகியம்மன் கோவில். தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய விழாக்கள் இந்தக் கோவிலில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக உபகோவில்களில் நடைபெறவிருந்த திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் தெரி வித்துள்ளதாவது:- பழனியை அடுத்த பால சமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோவிலில் செப்டம்பர் 7- ஆம் தேதி வரை நடை பெறவிருந்த ஆவணி பிரம்மோற்சவ திருவிழா வின் கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படு கின்றன. நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டாலும் கோவிலில் அன்றாம் நடைபெறும் கால பூஜைகளில் எந்த மாற்றமும் இன்றி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 31-ஆம் தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலிலும், சன்னதி வீதி வேலீஸ்வரா் கோவிலிலும் காலை பத்து மணிக்கு வருடாபிஷேக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. இதில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது.